என் இனிய பதிவுலக நண்பர்களுக்கு அன்பு வணக்கம், பதிவுலகிற்கு புதியவன் நான். என்னுடைய முதல் முயற்சியாக கம்பராமாயணத்தை மூலம் மற்றும் உரையுடன் பதிவு செய்யலாம் என்று எண்ணி தொடங்குகின்றேன். என்னுடைய பதிவில் ஏதேனும் பிழை இருப்பின் அருள் மன்னிக்க வேண்டுகிறேன்.

கம்பர் இயற்றிய இராமகாதையில் பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரண்ய கண்டம், சுந்தர காண்டம், கிட்கிந்தா கண்டம், யுத்த காண்டம் என் ஆறு காண்டங்கள் உள்ளன.

இராமகாதை நாடு முழுவதும் பரவியிருந்த காரணத்தினாலும், பௌரானிகர்கள் இராமயணத்தை அதிகம் பேசுவதற்காக எடுத்து கொண்ட காரணத்தினாலும், தனி தனியே பல்வேறு இடன்களிலிருந்து பிரவசனம் செய்கின்றவர்கள் தங்களுக்கு தேவையான பாடல்களை புதிதாக பாடி சேர்த்திருக்கிறார்கள். அவற்றை மிகை பாடல்கள் என்று பிரித்திருக்கிறார்கள். இதில் முதலாவது காண்டமான பால காண்டம் ஆற்றுப் படலத்தில் தொடங்கி பரசுராம படலம் வரை இருபத்து மூன்று படலங்களை உடையது. கம்ப இராமயணத்தில் பால காண்டம் என்பது பெரும்பாலும் இராமனுடைய பால பருவத்தின் நிகழ்ச்சிகளை பற்றி கூறியிருக்கிறார். கடவுள் வாழ்த்தில் முதல் பாடலுடன் எனது பதிவினை தொடங்குகின்றென்

பால காண்டம்

கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

எல்லா உலங்களையும் தாம் தம் சங்கர்பத்தால் படைத்தலையும், நிலைத்திருக்குமாறு காத்தலையும், அழித்தலையும், என்றும் முடிவுறாததும், அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய அவரே தலைவராவார் அப்படிபட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்




2 கருத்துகள்:

இன்னும் நிறைய எழுதுங்கள்நல்லாருக்கு

கண்டிப்பாக கம்பராமாயணத்தின் அனைத்து பாடலுக்கும் உரை எழுதுகின்றென்.உற்சாக படுத்தியதற்கு நன்றி!

கருத்துரையிடுக